| |
| உ சிவமயம் |
| 29. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் |
| தொகை |
| "........ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்....." | |
| - திருத்தொண்டத் தொகை - (5) |
| வகை |
| "கொற்றத் திறலெந்தை தந்தைதன் றந்தையெங் கூட்டமெல்லாந் தெற்றச் சடையாய்! நினதடி யேந்;திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பா?"னென் றுடைவா ளுருவியந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே. | |
| - திருத்தொண்டர் திருவந்தாதி - (35) |
| விரி |
3155 | நீடு வண்புகழ்ச் சோழர்நீர்நாட்டிடை நிலவு மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால் ஆடு பூங்கொடி மாடநீ டியவணி நகர்தான் பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால். | |
| 1 |
| புராணம் :- ஏயர்கோன் கலிக்காம நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில் இரண்டாவதாக ஏயர்கோன் கலிக்காம நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். |
| தொகை:- ஏயர்கோக்குடியின் வந்த கலிக்காமனாரது அடியவர்களுக்கும் நான் அடியேனாவேன். ஏயர் - குடிப் பெயர். ஏயர் பெருமகன் - (881) என்ற விடத்துரைத்தவை பார்க்க. (II. 1136.) கோன் - தலைமை குறித்து நின்றது; குடித்தலைமையும் அரசர்சேனாபதித் தலைமையும் குறித்தது. இந்நாளிலும் சேனாபதிக்கு "மாட்சிமை தங்கிய" என்று மன்னர்க்குரிய சிதப்புடன் கூறும் மரபு காண்க. |
| அடியார்க்கும் - உம்மை முன் துதித்த அடியார்களுடனே என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்புமாம். நம்பிகளுடன் கலிக்காமனாரது தொடர்பும் நட்பும் பின்னர்த் திருவருளால் வருவன என்பது இச்சரிதத்துட் காண்க. கழறிற்றறிவாரது வரலாறும் இவ்வாறேயாம். இங்குத் திருவருள் உணர்த்த முன்னுற உணர்ந்து துதித்தவாறாகும். |