பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்420

பக்கங்களிலும் பறைசாற்றும்படி செய்தனர்; தாம் பெற்ற நிதிகளாலாகிய பயனைக்
கொள்வாராகிய இடங்கழியார்.                                      9
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4116. (வி-ரை) மெய்த்தவர் - காவலாளர் பிடித்துக் கொணர்ந்த மெய்யடியார்;
களவு செய்தேயும் சிவன் அடியாரை அமுது ஊட்டுதல் வேண்டுமென்ற
உறுதிப்பாட்டினால் களவினால் தமக்கு நேரிடக்கூடிய அரச தண்டனையினையும்
மனங்கொள்ளாதவராதலின் மெய்த்தவர் என்றனர். தேச சேவை என்ற பெயரால் அரச
தண்டனையினைப் பொருட்படுத்தாதோரை இந்நாளில் பெருந்தியாகிகள் - தவசிகள் -
என்று கூறும் நிலையினைக் கண்டு இதன் உயர்வு கண்டு கொள்க.
 
     இருக்கும் வேன் மன்னர் - அரச கொலு வீற்றிருக்கும் வேலேந்திய மன்னர்1.
 
     அத்தன்.....செய்தேன் என்று இயம்புதலும் - அடியவர்களின் வீரங் குறித்தது;
எறிபத்த நாயனார் - செருத்துணையார் - இவர்கள் அரசர்களிடம் விடுத்த விடைகள்
ஈண்டு வைத்து ஒப்புக்காணத்தக்கன. (4104)
 
     மிக இரங்கி - அவ்வடியார் மனம் வருந்த வந்த நிலைக்கு மிக இரங்கினார்;
அடியவரை அமுதூட்ட முட்டுப்பட்டபோது அவருக்கிருந்த மன நிலைக்கும்,
காவலாளார் பற்றியபோது வருந்திய நிலைக்கும் இரங்கினர் என்க.
 

     விட்டு - காவலாளரது காவலின்றும் விடுவித்து.
 

     இவரன்றோ எனக்குப் பண்டாரம் - இவ்வடியவரன்றோ எனது சேம வைப்பு.
நெற்கூடு பண்டாரமாகாது; இவரே பண்டாரமாவார் என்பதாம்; என்னை? அது
நெல்லைத் தன்னுள் கொண்டு வாளாவிருக்குமே யன்றிப் பயன்றராது; இவர்
அவ்வாறன்றி அந்நெல்லைத் தம்முள் வைத்து அடியார்க்கமுதூட்டி அதனால் வரும்
பயனை எனக்குத் தேடித்தருபவர் என்பது கருத்து. மேல் “படைத்த நிதிப் பயன்
கொள்வார்”
(4117) என்பது காண்க; ஓகாரம் உடன்பாட்டு வினா; உறுதி குறித்தது;
“அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி” (குறள்) என்ற கருத்தும், “தனக் குதவ
வைக்குமிடம் அவ்வறம்” என்ற உரையும் காண்க. பண்டாரம் - நிதிச்சாலை;
“பண்டாரத் தேயெனக் குப்பணித்தருள வேண்டும்” “பாதம்பணி வார்கள்பெறு பண்டம்”
(நம்பி - தேவா) பண்டம் - பொருள்; அயலாரது பொருள் கவர்ந்து நல்வினை
செய்யின் அதனால்வரும் அறம், பொருளுடையாரையும், தீவினை செய்யின் மறம்
கவர்ந்தாரையும் சாரும் என்பது நீதி நூற் கருத்து, (ந - சிவ)
 
     என்பார் - என்பாராகி; முற்றெச்சம்.
 
     என்பார் - பயன் கொள்வார் - பண்ணுவித்தார் என்று, வரும் பாட்டுடன்
முடிக்க.                                                        8
 
     4117. (வி-ரை) நிறையழிந்த உள்ளத்தான் - ஆள் - உருபுஉடனிகழ்ச்சிப்
பொருளில் வந்தது. நிலையழிந்த உள்ளத்தோடும்; தமது அரசாட்சியில் அடியார்கள்
சிவன் திருத்தொண்டுக்கு உடலின்றி வருத்தும் நிலையும் உளதாயிற்றே என்றும்,
உண்மை யடியாரை அறியாது காவலாளர் பிடிக்க நேர்ந்ததே என்றும், மனமழிந்தனர்;
சிவதருமங்களைச் செல்வே அவரவரும் வேண்டியவாறு செய்யும்படி நிறுவுவது
 

_______________

1      குறிப்பு :- இருக்கும் வேன் - என்பது இருக்கு வேள் என்றிருத்தல் கூடுமோ
என்பது ஐயப்பாடு; “இருக்குவேளிர் மன்” (திருவந் - 65) என்ற வகைநூல் காண்க;
இருக்குவேளிர் என்பது இம்மன்னரது மரபின் பெயர் என்பது சரித ஆராய்ச்சி யாளர்
கல்வெட்டு
ஆதரவுகளாற் கண்டது..