| 
 
1198. ஆலிள மதியினொ டரவுகங்கைகோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
 ஏலநன் மலரொடு விரைகமழும்
 காலன வளநகர் கடைமுடியே. 3
 1199. கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்மையணி மிடறுடை மறையவனூர்
 பையணி யரவொடு மான்மழுவாள்
 கையணி பவனிடங் கடைமுடியே. 4
 __________________________________________________ கு-ரை: கங்கையையும் பிறையையும் அணிந்த
திருமுடியையும், புலித்தோலை உடுத்த அரையையும் உடைய
அடிகளிடம் கடைமுடி என்கின்றது. திரை - அலை. ஆகுபெயரால்
கங்கையை உணர்த்தியது. அதள் - தோல். 3. பொ-ரை: கல்லால மர நீழலில்
இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய
திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம்
பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக
விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய
வளநகராக விளங்குவது கடைமுடியாகும். கு-ரை: இளம்பிறை முதலியவற்றையுடைய
இறைவனைத் தொழ, மலர்மணங்கமழும் திருவடியையுடையவன்
நகர் கடைமுடி (அடைவோம்) என்கின்றது. இறைஞ்சி என்ற
செய்து என் வினையெச்சத்தைச் செயவென் எச்சமாக
மாற்றுக. இறைஞ்சக் கமழும் காலன நகர் எனமுடிக்க. 4. பொ-ரை: கொய்யப் பெற்ற அழகிய
மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம்
பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய
பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண்
அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர்
கடைமுடியாகும். கு-ரை: கொன்றையையணிந்த நீலகண்டனும்,
அரவையும், மானையும், மழுவையும் கையில் அணிந்தவனும்
ஆகிய இறைவன் இடம் கடைமுடி என்கின்றது. கொய் -
கொய்யப்பெற்ற. மை - விடம். பை - படம். |