| 
 113. திருவல்லம் பதிக வரலாறு: திருமாற்பேறு உடையவர்தம் திருவருள் பெற்றுத்
திருவல்லத்தையடைந்த சிவஞானச் செம்மலார், அங்குள்ள
பெருமானுக்கு "எரித்தவன் முப்புரம்" என்னும் திருப்பதிகப்
பெரும் பிணையலை அணிவித்தார். பண் : வியாழக்குறிஞ்சி பதிக எண்: 113 திருச்சிற்றம்பலம் 
1218. எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
 விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
 தெரித்தவ னுறைவிடந்திருவல்லமே. 1
 1219. தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்தூயவன் றூமதி சூடியெல்லாம்
 ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும்
 சேயவ னுறைவிடந் திருவல்லமே. 2
 __________________________________________________ 1. பொ-ரை: அவுணர்களின் முப்புரங்களையும்
எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும்
சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை
அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன்
தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும்
இடம் திருவல்லமாகும். கு-ரை: முப்புரம் எரித்தவன். சடையிற்
கங்கையைத் தரித்தவன். வேதங்களை விரித்தவன். வேறு
வேறு தெரித்தவன் இடம் திருவல்லம் என்கின்றது.
விரித்தவன் - பரப்பியவன். தெரித்தவன் -
பொருளுணர்த்தியவன். 2. பொ-ரை: உலக உயிர்கட்குத் தாய்
போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத
தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப்
பொருள்களுமாக ஆனவனும், போகிகள் |