| 
வாழ்த்து
         
வையம் நீடுக மாமழை மன்னுகமெய் விரும்பிய அன்பர் விளங்குக
 சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
 தெய்வ வெண்திரு
      நீறு சிறக்கவே.
 
 - பெரிய புராணம்.
       
 வான்முகில் வழாது பெய்க
       
மலிவளம் சுரக்க மன்னன்
       
      கோன்முறை அரசு செய்க
       
குறைவிலாது உயிர்கள்
      வாழ்க
       
நான்மறை அறங்கள் ஓங்க
       
நற்றவம்
      வேள்வி மல்க
       
மேன்மைகொள் சைவ நீதி
       
      விளங்குக உலக மெல்லாம்.
       
 - கந்தபுராணம்.
       
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
 நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
 புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல்
      வாழ்க.
 
 - திருவிளையாடற் புராணம்.
       
திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி
       
சேரும்நின்றன்
       
      மருவார் மரபும் திருநீறும் கண்டியும்
       
 வாழ்கஅருட்
       
      குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்
       
கோநிரைகள்
       
 தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த
       
தேசிகனே.
       
 - ஆதீன அருள் நூல்.
     |