கண்டல்கண்
மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம்
பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை
பாடியாடிக்
கூடும வருடை
யார்கள்வானே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
போற்றப் பெறுபவரும்
ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை
மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால்
சூழப்பட்ட சீகாழிப் பதியில் கவுணியர் குடியில்
தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை
இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது
உடைமையாகப் பெறுவர்.
கு-ரை:
திசையிலுள்ளார் அனைவரும் வணங்கும் பெருமானை
ஆவூரில் வழிவழி உரிமைபூண்ட சில அடியார்கள்
போற்றுகின்றார்கள் என்பதாம். கண்டல் - தாழை,
சொன்ன - சொல்லினவாய பாடல்கள். பாடி -
வாய்த்தொண்டு. ஆடி - மெய்த்தொண்டு. கூடுதல் -
சிந்தைத்தொண்டு. கூடுமவர் - தியானிப்பவர்.
|
நல்லூர்ப் புராணம்
கோழி
வந்த கொடியவன் தாதையை
வாழி வந்தனை செய்து வழுத்திடும்
ஆழி வந்த வமுதை நிகர்கவிக்
காழி வந்த கவுணியன் போற்றுவாம்.
- வேலைய
தேசிகர்.
காசி காண்டம்
கேழ்கிளர்
புனிற்றுத் திங்கள் கிடந்தொளிர் சடையோன்
பங்கில்
தாழிருங் கூந்தற் பேதை தடமுலைத் தீம்பால் மாந்தி
யேழ்நிலை வரைப்பு
முய்ய வீர்ந்தமிழ் மாரி பெய்த
காழிமா முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப்பாம்.
- அதிவீரராம
பாண்டியன். |
|