24. சீகாழி
பண் : தக்கராகம்
பதிக எண்: 24
திருச்சிற்றம்பலம்
250. பூவார் கொன்றைப் புரிபுன்
சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1
251. எந்தை யென்றங் கிமையோர்
புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்ட மாடும் மடிகளே. 2
__________________________________________________
1. பொ-ரை: பாடல்களின்
சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள்,
"கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை
ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும்
சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத
அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.
கு-ரை: இது பாக்களின்
சொற்பொருளாய்ப் பயிலும் பரமர் திரிபுரம் எரித்த
சீகாழியார் போலும் என்கின்றது. புரிபுன் சடை
- புரியாக முறுக்கேறிய புல்லிய சடை. ஏத்தும் - மக்களாலும்
தேவர்களாலும் ஏத்தப்படுகின்ற. மேவார்
- பகைவர்களாகிய திரிபுராதிகள். பாவார் இன்
சொல் - பாக்களில் நிறைந்த இனியசொல், பயிலுதல்
- சொற்கள் தோறும் பொருளாய் அமைதல்.
2. பொ-ரை: அந்திக் காலத்தில் நடனம்
ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே
என அன்போடு அழைத்து ஆலயத்துட் புகுந்து குழுமி மணம்மிக்க
மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப்
பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை
அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.
கு-ரை: அந்திக்காலத்து நடமாடும் அடிகளே
மாலையுஞ் சாந்துங் கொண்டு தேவர்கள் வழிபடும்
காழியார்போலாம் என்
|