| 
 260. காரார் வயல்சூழ் காழிக்
கோன்றனைச்சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
 பாரார் புகழப் பரவ வல்லவர்
 ஏரார் வானத் தினிதா விருப்பரே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ 11. பொ-ரை: நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட
சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது,
சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த
பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர்,
அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர். கு-ரை: காழிநாதனைப்பற்றி ஞானசம்பந்தன்
சொன்னவைகளை உலகோர் புகழ உரைக்கவல்லவர்கள்
வானத்து இனிதாய் இருப்பர் என்கின்றது. ஏர் - அழகு. 
  
  
    
      | திருத்தொண்டர் புராணம் திருஞானசம்பந்தர் புராணம் திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்றுள் ஒன்று விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
    தமைப்பாட மேவு காதல் பொருத்தம்உற அருள்பெற்றுப்
    போற்றிஎடுத் தருளினார் பூவார் கொன்றை. - சேக்கிழார். |  |