| 
 342. வாசங் கமழ்மா மலர்ச்சோ
லையில்வண்டேதேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
 பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய
 ஈச னுறைகின் றவிடை மருதீதோ. 5
 343. வன்புற் றிளநா கமசைத்
தழகாகஎன்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
 அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
 இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ. 6
 __________________________________________________ தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற
இடைமருதூர் இதுதானோ? கு-ரை: அந்தம் அறியாத வேதமுதல்வன்
எனக் கூட்டுக. அருங்கலம் உந்தி - அரிய ஆபரணங்களைக்
கரையில் வீசி. 5. பொ-ரை: மணம் கமழும் சிறந்த
மலர்களை உடையசோலைகளில் வண்டுகளைக் கொண்டதும்,
உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத்
திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும்
உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது
என்னும் தலம் இதுதானோ? கு-ரை: வண்டு புகுந்து ஈண்டி செம்மையுடைத்தாய்
இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்ற
இடைமருது என வினை முடிவுசெய்க. தேசம் புகுந்து - பல இடங்களிலும் சுற்றி,
செம்மை உடைத்தாய் - குரலின் இனிமை படைத்து. இத்தலத்தில்
தைப்பூசத் திருநாள் அன்று இறைவன் காவிரியில்
தீர்த்தங்கொள்வர். 6. பொ-ரை: வலிய புற்றுக்களில்
வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக்
கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும்
அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற் பிரியாத உமையம்மையோடும்
உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற் றுறையும்
இடைமருது என்பது இதுதானோ? கு-ரை: வல்புற்று இளநாகம் - வலிய
புற்றில் வாழும் இளநாகம் அவைகளை அவயவங்களிலே
அணியாகக் கட்டி. அன்பில் பிரியாதவள் -
பிரியாவிடையாகிய பார்வதி. |