மதியின் னொடுசேர்கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. 2
384. கொக்கின் னிறகின்
னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. 3
385. சிறைகொண் டபுரம்
மவைசிந்தக்
கறைகொண்டவர்கா தல்செங்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. 4
__________________________________________________
வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக்
கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை
உடையதுமான திருவையாறு ஆகும்.
கு-ரை: நான்கடிகளிலுமுள்ள மதி என்ற
சொல் சந்திரனையே குறிப்பதாகும். வடம் - மாலை.
மதி ஒன்ற உதைத்தது, தக்கயாகத்தில் தம் திருவடியால்
தேய்த்ததை.
3. பொ-ரை: கொக்கிறகு என்னும் மலரோடு
வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை
உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும்
தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய
இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.
கு-ரை: கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ;
கொக்கினது இறகுமாம். வன்னி - வன்னியிலை. திக்கின்
இசை தேவர் - எட்டுத்திக்கிலும் பொருந்தியிருக்கின்ற
தேவர்கள். அக்கு - சங்குமணி.
4. பொ-ரை: சிறகுகளோடு கூடிய
முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான்
விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப்
புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள்
பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு
ஆகும்.
கு-ரை: சிறைகொண்டபுரம் - சிறகோடு
கூடிய முப்புரங்கள். கறைகொண்டவர் - கோபித்தவர்.
மறைகொண்ட நல் வானவர் -
|