| 
 
389. வரையொன் றதெடுத்த தவரக்கன்சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
 விரையின் மலர்மே தகுபொன்னித்
 திரைதன் னொடுசே ருமையாறே. 8
 390. சங்கக் கயனு மறியாமைபபொங்குஞ் சுடரா னவர்கோயில்
 கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
 அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 9
 __________________________________________________ யினின்று இழிந்துபெருகி வரும் காவிரி
நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும். கு-ரை: வரம் ஒன்றிய - வரம் பெற்ற.
மேன்மைபொருந்திய என்றுமாம். சேர்வு - இடம். வரைநின்று
இழிவார்தரு பொன்னி எனப் பிரிக்க. வார்தரு - ஒழுகுகின்ற.
அரவம் - ஒலி, பொன்னி - காவிரி. 8. பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்த
இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு
நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம்
பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகி
காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும்
திருவையாறு ஆகும். கு-ரை: விரை - மணம். சிரம் அங்கம்
- தலையும் பிற அங்கங்களும். 9. பொ-ரை: சங்கத்தைக் கையின்கண்
கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும்
சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில்,
காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக்
கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக்
காட்டும் திருவையாறாகும். கு-ரை: சங்கக்கயன் - சங்கத்தைக்
கையிலேயுடைய திருமால், கொங்கு - தேன். அங்கிக்கு எதிர்காட்டும் - காலையில்
அக்கினி காரியம் செய்வோர் அர்க்கியம் சமர்ப்பிக்கும். |