| 
 
469. காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன் பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள் பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. 11 திருச்சிற்றம்பலம் __________________________________________________ இடர்களை அகற்றிக் காத்தவர், அழகிய
சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடி மாமலை இறைவர். கு-ரை: சமணரும் புத்தரும் அறியமுடியாத
பிறை சூடிய பெருமான் என்கிறது. மூதுவர் ஆடை - முதிர்ந்த
காவியாடை. கடு - கடுக்காய்த்துவர். நா துவர்
பொய்ம்மொழி - நாக்கிற்குத் துவர்ப்பை உண்டுபண்ணும்
பொய். 11. பொ-ரை: அழகிய நீண்ட
பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடி மாமலை
இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும்
சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன்
பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள்
பத்தையும் ஓத வல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும்
பொன்னுலகின்கண் பொலிவோராவர். கு-ரை: இத்தலத்திறைவனை ஏத்தவல்லவர்கள்
தேவராய்த் திகழ்வர் என்கின்றது. காமரு - அழகிய.
நாமரு - நாவிற் பொருந்திய. 
  
  
    
      | ஆளுடைய பிள்ளயார் திருவந்தாதி வாழ்த்துவ தெம்பர மேயாகும்
அந்தத்து வையமுந்நீர்ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
 ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
 காத்திகழ் கேதகம் போதகம் ஈனுங் கழுமலமே.
 - நம்பியாண்டார்நம்பி. |  |