| 
 
    611. பத்தர் மன்னிய பாற்றுறை மேவியபத்து நூறு பெயரனைப்
 பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
 பத்தும் பாடிப் பரவுமே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும்
அருள்நெறி முதிர்ச்சியால் என அறிக. வரும்
தோணிபுரப் பதிகத்தும் இக்காட்சியைக் காண்க. 11. பொ-ரை: அடியவர்கள் நிறைந்துள்ள
திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம்
திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப்
பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின். கு-ரை: பாற்றுறைநாதரைப் பற்றிய
இப்பாடல் பத்தையுஞ் சொல்லிப் பரவுங்கள்
என்கின்றது. பத்து நூறு பெயரன் - ஆயிரந்
திருநாமத்தையுடையவன். 
  
  
    
      | திருப்புகழ் எதிரி லாதபத்தி தனைமேவி இனிய தாள்நினைப்பை இதுபோதும் இதய வாரிதிக்குள்
        உறவாகி எனது ளேசிறக்க அருள்வாயே கதிர காமவெற்பில் உறைவோனே கனக மேருஒத்த புயவீரா மதுர வாணியுற்ற கழலோனே வழுதி கூன்நிமிர்த்த பெருமாளே. - அருணகிரிநாதர். |  |