| 
 
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்சேடராகிய செல்வரே. 2
 614. பூதம் பாடப் புறங்காட் டிடையாடிவேத வித்தகன் வேற்காடு
 போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
 கேத மெய்துத லில்லையே. 3
 615. ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்வீழ்ச டையினன் வேற்காடு
 தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
 பாழ் படும்மவர் பாவமே. 4
 _______________________________________________
 இறைவனைப் பாடிப் பணிந்தவர்கள்,
இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள்
ஆவர். கு-ரை: வேற்காடு பணிந்தார்
இவ்வுலகில் பெரிய செல்வராவர் என்கின்றது.
சேடர் - பெருமையுடையவர். 3. பொ-ரை; பூதகணங்கள் பாட,
சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய
வித்தகனாக விளங்கும் திருவேற்காடு இறைவற்கு
மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும்
கொடுத்தவர்களுக்குத் துண்பங்கள் வருதல்
இல்லையாம். கு-ரை: வேற்காட்டுநாதரைப்
பூவுஞ்சாந்தும் புகையுங்கொண்டு வழிபட்டவர்க்கு
ஏதம் எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி -
ஆடுபவன்; பெயர்ச்சொல். ஏதம் - துன்பம். 4. பொ-ரை: ஆழமான கடல் என்று
சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட,
விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு
இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித்து
திப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும். கு-ரை: பணிந்த மனத்தோடு ஏத்த
பாவம் அழியும் என்கின்றது. ஆழ்கடல் எனக்கங்கை
கரந்தவன் - பல மகாநதிகளைத் தன்னகத்து
அடக்கிக்கொள்ளும் கடலைப்போல, கங்கையை
அடக்கியவன். வீழ்சடை - விழுதுபோலும் சடை.
தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந்
தன்மை (சித்தியார்). பாவம் பாழ்படும் - பாவம்
பயன் அளியாதொழியும். |