திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ்
அழிந்துபுவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தி னுதித்தரனோ
டம்மை தோன்றி அளித்தவள்ளச்
செழுந்தண் முலைப்பால்
குடித்துமுத்தின்
சிவிகை யேறி மதுரையில்போய்ச்
செழியன் பிணியுஞ் சமண்பகையுந்
தேவி துயரும் தீர்த்தருளி
வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
மதுரங் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த்தே
வாரப் பாடல் சிவன்கேட்க
மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
முகனே முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்
முருகா முத்தம் தருகவே.
- மகாவித்துவான் கவிராச
பண்டாரத்தையா.
|