அந்திவண்ணன் றன்னையழகார்
ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார்
சிவகதி சேர்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும்
தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய,
மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை,
ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை
மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.
கு-ரை: சண்பைநகர்ச் சிவபெருமானைப்
பற்றிச் சொன்ன ஞானசம்பந்தனது சொல்லைத் தியானத்தோடு
பாடவல்லார்கள் சிவகதி சேர்வர் என்கின்றது. வந்தி
- வந்தித்தல். வந்தி - அடியவருடைய வந்தித்தல், முதல்
நிலைத் தொழிற்பெயர். மறை - இரகசியம். சந்தி -
காலை மாலை. இறைவன் பூசைக்காலமல்லாத காலங்களில்
அம்மையோடு, வேதவிசாரணை செய்து சந்தியா காலங்களில்
சமாதி செய்கின்றார் என்ற அநுபவம் அறிவிக்கப்படுகிறது.
|
திருப்புகழ்
சைவமுதற்
குருவாயே
சமணர்களைத் தெறுவோனே
பொய்யர் மனத்
தணுகானே
புனிதஅருள் புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா
கடிகமழ்அற் புதலீலா
தெய்வதசற் குருநாதா
திருமதுரைப்
பெருமாளே.
- அருணகிரிநாதர். |
|