| 
 
    866. மையா ரொண்கண்ணார் மாட
    நெடுவீதிக்கையாற் பந்தோச்சுங் கழிசூழ்
    தில்லையுட்
 பொய்யா மறைபாடல் புரிந்தா
    னுலகேத்தச்
 செய்யா னுறைகோயில் சிற்றம்
    பலந்தானே. 3
 867. நிறைவெண் கொடிமாட நெற்றி
    நேர்தீண்டப்பிறைவந் திறைதாக்கும் பேரம்
    பலந்தில்லைச்
 சிறைவண் டறையோவாச் சிற்றம்
    பலமேய
 இறைவன் கழலேத்து மின்ப மின்பமே. 4
 868. செல்வ நெடுமாடஞ் சென்று
    சேணோங்கிச்செல்வ மதிதோயச் செல்வ
    முயர்கின்ற
 ____________________________________________________ 3.  பொ-ரை: மைதீட்டப் பெற்ற
ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட
வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால்
பந்தோச்சி விளையாடும் அழகுடையதும்,
உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும்
பொய்யாத வேதப் பாடல்களை விரும்பும் சிவந்த
திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை
ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும். கு-ரை: வேதத்தை விரும்பிய
சிவபெருமான் உலகேத்த உறையுங் கோயில்
சிற்றம்பலம் என்கின்றது. மையார் ஒண் கண்ணார் -
மை பூசிய ஒளிபொருந்திய கண்ணை உடைய பெண்கள்.
பொய்யா மறை - என்றும் பொய்யாத வேதம்.
புரிந்தான் - விரும்பியவன். 4.  பொ-ரை: மாடவீடுகளில்
நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள
பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து
சிறிதே தாக்கும் தில்லைப் பதியில் சிறகுகளை
உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும்
பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில்
எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே
இன்பம் ஆகும். கு-ரை: சிற்றம்பலநாதன் சேவடியை
ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. கொடிவந்து
பிறை இறைதாக்கும் பேரம்பலம் எனக் கூட்டுக. அறை -
ஒலி. 5.  பொ-ரை: செல்வ வளம்மிக்க
பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய
மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன் |