| 
 குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும்
சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய
இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன்
பாடிய இப்பதிகத் தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார்,
திருவடிப்பேறு பெறுவர். கு-ரை: இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம்
ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப் பாடிய திருவடிஞானத்தால்
வந்த இத்திருப்பாடல்களை வல்லார், திருவடி சேர்முத்தியை
எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான
மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் ஞானம் பெற்றார்,
திருவடிப்பேறு பெறுவர். கு-ரை: இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம்
ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப் பாடிய திருவடிஞானத்தால்
வந்த இத்திருப்பாடல்களை வல்லால், திருவடிசேர்முத்தியை
எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான
மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் -
அடிசேரும் முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள். 
  
  
    
      | திருஞானசம்பந்தர்
        புராணம் கன்னி மாவனங்
        காப்பென இருந்தவர் கழலிணை
        பணிந்தங்கு 
      முன்ன மாமுடக் கான்முயற் கருள்செய்த வண்ணமும்
        மொழிந்தேத்தி, மன்னு வார்பொழில்
        திருவடு கூரினை வந்தெய்தி
        வணங்கிப்போய்ப், பின்னு
        வார்சடை யார்தரு வக்கரை  பிள்ளையார்
      அணைவுற்றார்.  - சேக்கிழார். நால்வர் நான்மணிமாலை தேனே றலர்சூடிச்
      சில்பலிக்கென்றூர்திரியும்ஆனேறி யாண்டுப்பெற் றான்கொனீ - தானேறும்
 வெள்ளைமணி யென்று வினாவுவோம் வாங்கியவப்
 பிள்ளையையாங் காணப் பெறின்.
  - சிவப்பிரகாச
      சுவாமிகள். |  |