பக்கம் எண் :

956திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1010. பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 8

1011. இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 9

1012. தேர ரமணரும், சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின்றுள்குமே. 10

1013. நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்று முரைவல்லார், என்று முயர்வோரே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

கு-ரை: இடையாது - இடையீடு படாது. உலகம் உடையார் - சக்கரவர்த்தியாவர்.

8. பொ-ரை: பத்துத்தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.

கு-ரை: மொய்த்து - நெருங்கி.

9. பொ-ரை: திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.

கு-ரை: இருவர் - அயனும் மாலும்.

10. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின் நீர் நின்று உள்குவீராக.

கு-ரை: உள்கும் - தியானியுங்கள்.

11. பொ-ரை: திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

கு-ரை: ஒன்றும் உரை - அவன் தான் என வேறின்றி ஒன்றிய உரை.