பக்கம் எண் :

779

  கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை
     கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங்
     கருது மூரே.                         2
2224.







புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை
     புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல்
     நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர்
     பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது
     பாடு மூரே.                          3


     கு-ரை: வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் - பிரளய வெள்ளத்துள்
மேல் ஓங்கி மிதந்து விளங்கிய தோணிபுரம். தூநீர் - பரிசுத்த
ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு - இன்றும் உளது.
‘கோட்டாறு சூழ் கொச்சை’ (தி.3 ப.89 பா.1) கூரும் - மிகும். காணிய -
காண.

    வையகத்தார் - (வையாலாகிய வீடு என்னும் பொருள்படும் வையகம்
பெருகிய உலகிற்கு ஆகுபெயர்) உலகர். (தி.2 பதி.102- பா.5. கோட்டாறு).

     3. பொ-ரை: நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக
பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட,
சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.

     கு-ரை: நிகர் - ஒப்பு. இல் - இல்லாத நீர் மேல் நின்ற மூதூர் -
தோணிபுரம். அகலிய - அகன்ற இடத்தையுடைய. அம் தண்தராய் -
பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர் பிரானுக்கு. பகரும் - கூறும்.
‘நாம் கைதொழுது பாடும் ஊர்’ என்றதால், நாம் பாடும்போதும்
கைதொழுதல் இன்றியமையாதது என்பது விளங்கும்.

     இத்தமிழ் மறையைப் போற்றும் அருளொழுக்கம் புலப்படும். பா.6
குறிப்புரை பார்க்க.