|
பண்டையய
னன்னவர்கள் பாவனை
விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாணகைநன் மாதர்கள்
விளங்குமெழில் வீழிநகரே. 10 |
3667. |
மத்தமலி
கொன்றைவளர் வார்சடையில் |
|
வைத்தபரன்
வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன்
விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி
கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
போகமொடி யோகமவரதே. 11 |
திருச்சிற்றம்பலம்
ஆற்றலுடைய தெய்வம்
ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது?
வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும்
சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், வெண்ணிற முத்துப்போன்ற
ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய
திருவீழிமிழலையாகும்.
கு-ரை:
குண்டு-முருட்டுத்தன்மையையுடைய. அமணர் ஆகி - கோலம்
மிகு - அழகு மிக்க. பீலியொடு - மயிற்பீலியொடு. குண்டிகை பிடித்து,
எண்டிசையும் - எட்டுத்திக்கிலும், இல்லை ஒரு தெய்வம் உளது என்பர், அது
என்ன பொருள் ஆம் - அவ்வாறு அவர்கள் கூறுவது என்ன பயன்
தருவதாகும், பண்டை - வேதத்தைக் கேட்ட அக்காலத்து. அயன் -
பிரமனை. அன்னவர்கள் - ஒத்த அந்தணர்களின். பாவனை - பாவிக்கும்
திறனை. விரும்பு - விரும்புகின்ற. பரமன் - சிவபெருமான். மேவுபதி -
தங்கும் தலம். சீர் - சிறப்புற்ற. வெண்தரளவாள்நகை - வெள்ளிய முத்து
போன்ற. ஒளிபொருந்திய பற்களையுடைய. நல்மாதர்கள் - கற்புடைய
பெண்கள். எழில் விளங்கும் - அழகால் விளங்கும் வீழிநகர்.
11.
பொ-ரை: பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும், நீண்ட
சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும்
சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி.
|