பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)84. திருப்புறவம்1035

3702 கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடை
       முடியினர்
அக்குடை வடமுமொ ரரவமு மலரரை
     மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை
     மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ்
     புறவமே.                           2

3703. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை
 

     யுமையொரு
பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ
      டிரலைமெய்


நின்றது. (கழல் தொழும் அடியவரது) நண்ணிய - அடைந்த. பிணிகெட
அருள் புரிபவர், நணுகு - சேரும். உயர்பதி - (புகழ் ஒலி) மலி - மிகுந்த
புறவமே.

     2. பொ-ரை: கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும் கூடிய
குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவர்.
பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே ஆடையாகக்
கொண்ட உருவினர். அவர் மலைமகளான உமாதேவியோடு
வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம்
என்னும் திருத்தலமாகும்.  

    கு-ரை: கொக்கு உடை இறகு - கொக்குருவோடுவந்த அசுரனைக்
கொன்று அதற்கறிகுறியாய் அவ்விறகைத் தலையில் அணிந்தனர்.
"கொக்கினிற கதணிந்து நின்றாடி தென்கூடல்" என்னும் திருக்கோவையாரிலும்
வருவதறிக. இறகோடும். பிறையோடு்ம் குளிர்கின்ற சடைமுடியினர்.
அக்குஉடைவடமும் - அக்குப்பாசியால் ஆகிய மாலையும். ஒரு அரவமும்,
மலர் - விளங்கும். அரைமிசை - இடுப்பில் திக்கு உடை மருவிய உருவினர்
- திகம்பரர் (நிர்வாண வடிவினர்; பிட்சாடன அவதாரம்.) மலை மகளொடும்
உறைவது புறவமே. 3, பொ-ரை: வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும்,
வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும்