|
அரும்பன
வனமுலை யரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 4 |
| 3771. |
வளங்கிளர்
மதியமும் பொன்மலர்க் |
| |
கொன்றையும்
வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 5 |
மொய்க்கும், தேன்
மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க
சடைமுடியில் அணிந்தவர். அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய
கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும்
இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். அவரே இரவில்
வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அ(ன்)ன கரும்பு வரிசிலைக்காமன் - கரும்பாகிய கட்டமைந்த
அத்தகைய வில்லையுடைய மன்மதன், பெருந்தகைக் காமன், கவின் அழித்த
- அழகிய உடலை அழித்த, உடலைக்கவின் என்றது தானியாகு பெயர்,
அரும்பு - தாமரையரும்பு, கோங்கின் அரும்புமாம். தனக்கு இறுதி
நேர்வதோர்ந்தும், தேவர்கள் துயர் தீர்தலைக் கருதி யிறைவன்
மேற்சென்றமையிற் பெருந்தகைக் காமன் என்றார்.
5.
பொ-ரை: அழகு மிளிரும் சந்திரனும், பொன் போன்ற
கொன்றைமலரும், வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச்
சடைமுடியில் வைத்தருளிய, நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான்
பிரமகபாலம் ஏந்தியவர். அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர். அவர்
உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும்
திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும்
வீற்றிருந்தருளுவார்.
|