பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)105. திருக்கலிக்காமூர்1211

3930. ஊரர வந்தலை நீண்முடியா
       னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
     பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குலம் பேதையஞ்சத்
     திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாத
     முடையா னிடமாமே.                  8

3931. அருவரை யேந்திய மாலுமற்றை
 

     யலர்மே லுறைவானும்
இருவரு மஞ்ச வெரியுருவா
     யெழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை
     யுணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத்
     தேசுண் டவர்பாலே.                  9


திருவகவல். அடி.73.) ஓலமிடாதவர் ஊழி வாழினும் சிவஞானம் கைவரப்
பெறா என்பது ஈற்றடியின் கருத்து. உணர்வு - சிவஞானம்.

     8. பொ-ரை: ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில்
அணிந்து, ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு,
கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி
திருக்கலிக்காமூர் என்பதாம். அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய
உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன்
அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய
சிவபெருமானுடைய இருப்பிடமாகும்.

     கு-ரை: ஆள்பவருக்கு முடி இன்றியமையாது வேண்டப் படுதலின்
ஊரும் பாம்பைத் தலையிற் சுற்றிய முடியால் உலகாண்டு என்றார்.
“உலகாண்டு” என்பது “மண்ணுலகம் விண்ணுலகம் உம்மதே ஆட்சி”
(தி.7.ப.46.பா.9.) ஆர் அரவம்பட - மிகக் கதற வைத்த பாதம் உடையான்.

     9. பொ-ரை: கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய
திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும்
அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும், திருக்கலிக்காமூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், ஒப்பற்ற மலை அரசன் மகளை
ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை