| 3941. |
வெஞ்சின
வாளரக்கன் வரையை |
| |
விறலா
லெடுத்தான்றோள்
அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று
மடர்த்தா ரழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்று
நணுகு மிடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும்
வலஞ்சுழி மாநகரே. 8 |
திரிபுர அசுரர்களின்,
பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும்
அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர் பயின்ற
திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை ஆளும் அரசரான
அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர்.
கு-ரை:
கல் இயலும் மலை - கல்லின் தன்மை பொருந்திய மலை,
மேரு. நீங்க - (கல்லின் தன்மை) வளையாமை நீங்க. அம்மை - அழகிய
கையால், வளைத்து. வளையாதார் - செருக்குற்ற திரிபுரத்தசுரர். சொல்
இயலும் - பழிச்சொல்லுக்கு இடமாகிய, மதில். செற்ற - அழித்த. சுடரான் -
ஒளிவடிவானவன். இடர் நீங்க - அடியாருக்கு இடர் நீங்கும் பொருட்டு. மல்
இயலும் - மற்போர் பயின்ற. திரள் தோள் - திரண்ட தோளையுடைய. எம்
ஆதி - எமது முதல்வனும், திருவலஞ்சுழியாகிய பெரிய தலத்தையே. புல்கிய
- இடமாகக் கொண்டருளிய. வேந்தனை - அரசனுமாகிய சிவபெருமானை.
ஆன்மாக்கள் குடிகளாக அவற்றை ஆளுந்தன்மையால் இறைவனை
வேந்தன் என்றார். வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகி (தி.1.ப.130. பா.6.) என்றார் முன்னும். அரைசே
போற்றி என்றார் திருவாசகத்திலும் (தி.8 போற். திருவக. அடி 104).
8.
பொ-ரை: கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன்
வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன் இருபது தோள்களையும்
அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய
கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம்
மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை
வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும்.
|