பதிக வரலாறு:
திருஞானசம்பந்தர்,
பல்லவனீச்சரத்தில், பாம்பணிந்த சாம்பசிவ
மூர்த்தியை ஏத்திப் பாடியருளியது இவ்விசைப் பதிகம்.
ஈரடி
பண்:
பழம்பஞ்சுரம்
ப.தொ.எண்:
370 |
|
பதிகஎண்:
112 |
திருச்சிற்றம்பலம்
4001. |
பரசுபாணியர்
பாடல்வீணையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார்
இவர்தன்மை யறிவாரார். 1 |
4002.
|
பட்டநெற்றியர்
நட்டமாடுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 2 |
1.
பொ-ரை: சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர்.
வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார்
அறிவார்? ஒருவரும் அறியார்.
கு-ரை:
பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில்
ஏந்தியவர். பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய வீணையை
உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட தன்மையை உடையவர்.
ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார் என்றார்.
2.
பொ-ரை: தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன்
அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
|