| ஆளுடைய 
              பிள்ளையார் திருவுலாமாலை நண்ணு புகழ்மறையோர் 
              நாற்பத்தெண் ணாயிரவர்எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்
 ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கட்
 கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்
 புகலி வளநகருட் பூசுரர் புக்காங்
 கிகலில் புகழ்பரவி ஏத்திப் - புகலிசேர்
 வீதி எழுந்தருளு வேண்டுமென விண்ணப்பம்
 ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்
 கேதகையுஞ் சண்பகம் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
 மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில்
 இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
 மருவொடு மல்லிகையை வைத்தாங் - கருகே
 கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
 பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
 புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
 தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய
 வண்செருந்திவாய் நெகிழ்ப்ப மௌவல் அலர்படைப்பத்
 தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்
 தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்
 போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற்
 கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்
 இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்
 தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
 வைத்து மணிக்கண் டிகைபூண்டு.
 -நம்பியாண்டார் 
              நம்பி.
 
 |