பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)120. திருஆலவாய்1339

கன்னலம் பெரிய காழியுண் ஞான
     சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ
     ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.            11

திருச்சிற்றம்பலம்


என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும்
ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி,
கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர்
அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு
ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

     கு-ரை: பல்நலம் - பலவிதமான செல்வ நலன்கள். புணரும் -
ஒருங்கே அமையப்பெற்ற. அந்நலம் - அத்தகைய வளம். கன்னல் (அம்)
கழனி - கருப்பங் கழனிகளை உடைய.

திருஞானசம்பந்தர் புராணம்

தாண்டர் தாம் போற்றிக் காட்டிடக்
     கண்டு துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
     மங்கையர்க் கரசி என் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாயாவ
     திதுவே என்றிருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற்
     பதிகம் பாடினார் குவலயம் போற்ற.

                                - சேக்கிழார்