| 4112. |
சம்பரற்
கருளிச் சலந்தரன் வீயத் |
| |
தழலுமிழ்
சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த
வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி
னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ
ருடையவர் வடதளியதுவே. 2 |
| 4113. |
பாங்குடைத்
தவத்துப் பகீரதற் கருளிப் |
| |
படர்சடைக்
கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த
தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த
வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே. 3 |
2.
பொ-ரை: சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும்,
சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற
சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம்
வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன்
புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும்,
தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள
உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
கு-ரை:
பொழியும் - ஏத்தும் என்னும் பெயரெச்சங்கள் ஓமாம்புலியூர்
என்னும் பெயர் கொண்டு முடிந்தது.
3.
பொ-ரை: சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு
அருள்செய்வது, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத்
தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத்
தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள்
செய்கின்ற, ஓங்கிய புகழை
|