பக்கம் எண் :

1352திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப்
     பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            9

4119. தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர்
       தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக்
     கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து
     நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            10


அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு
இனிது வீற்றிருந்தருளும் இடம், பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை
மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த
கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற
திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: பள்ளநீர் - பள்ளத்தில் தங்கியநீர். வாளைபாய் தரு -
வாளை மீன்கள் பாய்கின்ற.

     11. பொ-ரை: தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய
புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன்
விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் இடம், நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு
ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை
தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய
அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும்
திருக்கோயிலாகும்.

     கு-ரை: கலதிகள் - கொடியவர்கள். ‘கள்வன் கடியன் கலதியிவன்
என்னாதே’. (தி.8 திருவாசகம்.10.19.)