| பதிக 
        வரலாறு: 
 ஞானசம்பந்தர் திருப்புகலியிலிருந்து பாடியவற்றுள் 
        ஒன்று
 இத்திருப்பதிகம்.
 பண்: காந்தார பஞ்சமம்
 
         
          | ப.தொ.எண்: 265 |  | பதிக 
            எண்: 7 |                            திருச்சிற்றம்பலம் 
         
          | 2867. | கண்ணுத 
            லானும்வெண் ணீற்றினா னுங்கழ |   
          |  | லார்க்கவே பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ்
 சோதியும்
 புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக
 லிந்நகர்ப்
 பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு
 மானன்றே. 1
 |   
       
       1. 
        பொ-ரை: நெற்றிக் கண்ணையுடையவனும், திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவனும், திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப்பண்ணுடன் இசைபாட
 நடனம் ஆடுபவனும் ஆகி, மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள்,
 சிவபுண்ணியர்களாகிய, நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள்
 துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு
 வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான்.
       கு-ரை: 
        திருப்புகலியுள் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடும் வீற்றிருந்தருளும் பெருமானே நெற்றிக் கண்ணையுடையவனும்,
 வெண்ணீற்றவனும், பண்ணிசை பாட நின்று ஆடியவனும் பரஞ்சோதியும்
 ஆவான்.
 |