| 
         
          | 2911. | விண்டவர் 
            தம்புர மூன்றெரித் துவிடை |   
          |  | யேறிப்போய் வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந்
 தானிடம்
 கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற்
 கானல்வாய்ப்
 புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன
 வாயிலே.                          
            2
 |  
         
          | 2912. | விடையுடை 
            வெல்கொடி யேந்தினா னும்விறற் |   
          |  | பாரிடம் புடைபட வாடிய வேடத்தா னும்புன
 வாயிலில்
 தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர்
 வெண்மழுப்
 படைவல னேந்திய பால்நெய்யா டும்பர
 மனன்றே.                          
            3
 |  
       2. 
        பொ-ரை: பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி, வண்டமர்ந்துள்ள
 கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து, இறைவன் எழுந்தருளியிருக்கும்
 இடமாவது, தாழையும், புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச்
 சோலையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில்
 ஆகும்.
       கு-ரை: 
        பின்னிரண்டடிக்கு - பெருங் கடற்கரைச் சோலையில் தாழையும். புலிநகக் கொன்றையும் நிலைக்கப்பெற்று, தாமரை
 மலர்களையுடைய பாய்கயல் சூழப்படப் புனவாயிலே மங்கையொடும்
 மகிழ்ந்தானிடமாவது.
       3. 
        பொ-ரை: இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான
 சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி,
 கொன்றை மாலை அணிந்து, ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி,
 பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும்
 பரம்பொருள் ஆவான்.
 |