| 
       பதிக வரலாறு:      மூவுலகும் 
        உய்ய நஞ்சம் உண்ட மூர்த்தியார் மேவிய திருவிசயமங்கையில் எய்தி, அத்தனியாலயம் சூழ்ந்து தாழ்ந்து, வணங்கி,
 அத்தலத்தில் வழிபட்ட கோதனத்தைச் சிறப்பித்து ஏத்திய செந்தமிழ்மாலை
 இத்திருப்பதிகம்.
 பண்: 
       காந்தார பஞ்சமம்  
         
          | ப. 
            தொ. எண்: 275 |  | பதிக 
            எண்: 17 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 2976. | மருவமர் 
            குழலுமை பங்கர் வார்சடை |   
          |  | அரவமர் 
            கொள்கையெம் அடிகள் கோயிலாம் குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
 விரவிய பொழிலணி விசய மங்கையே.           1
 |  
         
          | 2977. | கீதமுன் 
            னிசைதரக் கிளரும் வீணையர் |   
          |  | பூதமுன் 
            னியல்புடைப் புனிதர் பொன்னகர் கோதனம் வழிபடக் குலவு நான்மறை
 வேதியர் தொழுதெழு விசய மங்கையே.          2
 |  
	   
       1. 
        பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான்
 எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய
 மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை
 ஆகும்.
       கு-ரை: 
        மரு - வாசனை. தெய்வக் கற்புடைய அம்பிகையின் கூந்தல் இயற்கை மணம் கமழ்வது ஆதலால் மரு அமர் குழல் உமை என்றார்.
 வார்சடை ... ... எம் அடிகள் - நெடிய சடையின் கண்ணே பாம்பையும்
 விரும்பத்தக்க கொன்றை மாலையையும் உடைய எம் அடிகள். குரவும்
 ஏனைய மரங்களும் கலந்தபொழில்.
       2. 
        பொ-ரை: கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான
 |