| 
       பதிக வரலாறு:      திருப்புத்தூரிலிருந்து 
        சிலநாள் வழிபட்டுத் திருநெல்வேலிக்குச் செல்லுங் காலை, இடையில் உள்ள திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம்,
 குறும்பலா ஆகியவற்றைக் கும்பிடு முன்னர், திருப்பூவணத்தை இறைஞ்சிப்
 புகழ்ந்து பாடியது இத் திருப்பதிகம்.
 பண்: 
        காந்தார பஞ்சமம்  
         
          | ப.தொ.எண்: 278 |  | பதிக எண்:20 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3009. | மாதமர் மேனிய னாகி வண்டொடு |   
          |  | போதமர் பொழிலணி பூவ ணத்துறை வேதனை விரவலர் அரண மூன்றெய்த
 நாதனை அடிதொழ நன்மை யாகுமே.     1
 |  
         
          | 3010. | வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு |   
          |  | தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை ஆனநல் லுருமறை அங்கம் ஓதிய
 ஞானனை அடிதொழ நன்மை யாகுமே.     2
 |  
       1. 
        பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்கொண்டு, வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய
 திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, துன்பம்தரும்
 பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான
 சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.
      கு-ரை: 
        போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை. விரவலர் - பகைவர்களாகிய அசுரர்கள். அரணம் மூன்றும் எய்த - மதில் மூன்றையும்
 எய்த (நாதன்).
       2. 
        பொ-ரை: வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்தோங்கிய, வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள
 |