| 
         
          | 3022. | மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி |   
          |  | நஞ்சுறு திருமிட றுடைய நாதனார் அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
 வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.     3
 |  
         
          | 3023. | ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் |   
          |  | கானிடை 
            யாடலான் பயில்க ருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
 வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.       4
 |  
  வனும், பகையசுரர்களின் 
        மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த்
 திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
 எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத்
 துன்பம் இல்லை.
       கு-ரை: 
        மூது எயில் - பழமையான மதில், இங்குத் திரிபுரம். இயல் - பொருந்திய.
       3. 
        பொ-ரை: மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட
 திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள்
 மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில்
 ஆடல் செய்வது என்கொல்?
       கு-ரை: 
        மஞ்சு - மேகம். அஞ்சுரும்பார் குழலரிவை - அழகிய வண்டுகள் ஒலிக்கும் குழலையுடைய அம்பிகை; வெம்சுரம் - கொடியகாடு.
 பிரளயத்து உலகம் வெந்து சாம்பலான இடம் வெஞ்சுரம் எனப்பட்டது.
 அதில் இறைவன் நடித்தது ஒரு விளையாட்டாக இருந்தது என்பார்;
 வெஞ்சுரம் விளையாடல் என்கொலோ என்றார்.
       4. 
        பொ-ரை: வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர்! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான்
 வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த
 கோயிலை வணங்கியும், நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற
 அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தியும் வாழ்வீர்களாக!
 |