பதிக வரலாறு:
திருமுதுகுன்றத்தை
அடைவோம் என்னும் சொன்மலர் மாலை
வண்பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி, அப்பொருப்பினில்
ஆதரவுடன் சென்றார் ஆளுடைய பிள்ளையார். அதனை வழிபட
வலங்கொள்வாராய் நறுந்தமிழ்ச் சொன்மலர் சூட்டி மகிழ்ந்தார். நம்பர்
திருக்கோயிலுள் புகுந்து, சேவடி திளைத்த அன்புடன் தாழ்ந்து, எழுந்து,
காதலால் பல முறை சாத்திய தண்டமிழ்த் தொடைகளுள் ஒன்று
இவ்வண்ண மாமலர்த் திருப்பதிகம்.
பண்:
கொல்லி
ப.தொ.எண்:292 |
|
பதிக
எண்: 34 |
திருச்சிற்றம்பலம்
3159. |
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட |
|
அண்ணலா
ராயிழை யாளொடு மமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே. 1 |
3160. |
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு |
|
பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன் |
1.
பொ-ரை: பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள்
வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு
இனிது வீற்றிருந்தருளும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து
வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லைநிலம் சூழ
விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
திண்ணில் ஆர் - பிருதிவியின் தன்மையாகிய திண்மையில்
பொருந்திய. புறவு - முல்லை நிலத்தை. அணி - அணிந்த; சூழ உடைய
திருமுதுகுன்றம். மண் கடினமாய்த் தரிக்கும் (உண்மை விளக்கம். பா.10.)
என்பதால் திண்ணில் ஆர் புறவு எனப்பட்டது.
2.
பொ-ரை: வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து,
படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில்
|