| 
         
          | 3180. | தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் |   
          |  | கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
 பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.    11
 |   
        திருச்சிற்றம்பலம்
       
 
             பொழில் தண்தலை 
        கொண்டல் ஆர் - சோலைகளின் குளிர்ந்த உச்சியில் மேகங்கள் படியும்.
       11. 
        பொ-ரை: தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண் அமைந்துள்ள
 நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த
 ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப்
 பாவம் இல்லை.
       கு-ரை: 
        கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய. கடி பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி. பால்நல் ஆர் மொழி
 - பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய. மாலை வல்லார்க்குப்
 பாவம் இல்லையாம்.
 
        
          | மதுரைச் சொக்கநாதர் உலாமூவர் பெருமை
 
                     வையை 
              எதிர்ஏடேற்றித் தென்னவனை ஈடேற்றி, வெஞ்சமணக்
 காடேற்றம் ஏறக்கழுவேற்றி - நீடேற்றம்
 தானேற்ற புத்தன் தலையில் இடியேற்றும்
 கானேற்ற பாடல் கவுணியனும் - மேனாள்
 நிலை கடந்த காற்றூணால் நீண்ட கடலாழி
 அலைகடந்த நாவுக்கரசும் - மலரடைந்த
 புள்ளாவாம் பொய்கையிடைப் புக்கமுதலை வாய்ப்
 பிள்ளைவா என்ற பெருமாளும்.
 -புராணத் திருமலைநாதர்.
 |  |