| 
         
          | 3221. | எக்கராமமண் கையருக்கெளி |   
          |  | யேனலேன்றிரு 
            வாலவாய்ச் சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
 கும்முடித்தென்னன் முன்னிவை
 தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ்
 நாதன்ஞானசம் பந்தன்வாய்
 ஒக்கவேயுரை செய்தபத்து
 முரைப்பவர்க்கிட ரில்லையே.         11
 |  
        
        திருச்சிற்றம்பலம்
       
 
             11. 
        பொ-ரை: திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று
 பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ்
 நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை
 ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
       கு-ரை: 
        சொக்கன் - கண்டார் மயங்கி விழும்படியான பேரழகுடையவன்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  ஞானஆ 
              ரமுதம் நற்றவத் திருவை நோக்கிமானினேர் விழியி னாய்! கேள்; மற்றெனைப் பாலன் என்று
 நீநனி அஞ்ச வேண்டா; நிலையிலா அமணர்க் கென்றும்
 யானெளி யேன லேன் என் றெழுந்திருப் பதிகம் பாடி.
 -சேக்கிழார்.
 |  |