| 
         
          | 3243. | கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம் |   
          |  | மெச்சுஞ்சொல்லை, 
            நச்சும்புகழே.         11 |  
        
        திருச்சிற்றம்பலம் 
       
 
             பெருகும் 
        திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து வழிபடுவோமாக.
       கு-ரை: 
        பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர்; என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம். நெறியில் -
 அவர்கள் வழியிற் சேர்தலில்லாத. கம்பம் - கோயில்.
       பொ-ரை: 
        கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய
 இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.
       கு-ரை: 
        கொச்சை - கொச்சைவயம், சீகாழி. மெச்சும் சொல்லை - வியந்து பாடிய இப்பதிகத்தை. நச்சும் புகழ் - புகழ் விரும்பும்; என்றது
 இப்பதிகத்தைப் பாடவல்லார்க்குப் புகழ் முதலிய மேன்மைகள் தாமாகவே
 விரும்பி வந்தடையும் என்பதாம். புகழ் - உபலட்சணம்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  பரம னார்தந் திருத்தொண்டர் பண்புநோக்கிப் பரிவெய்தி
 விரவு காத லொடும்விரைந்து விமலர்
 கோயில் புக்கருளி
 அரவும் மதியும் பகைதீர அணிந்தார்
 தம்மை அடிவணங்கி
 இரவு போற்றித் திருப்பதிகம் இசையிற்
 பெருக எடுத்தருளி.
 -சேக்கிழார்.
 |  |