| 
         
          | 3319. | மந்த முந்து பொழின்மழ பாடியுள் |   
          |  | எந்தை சந்த மினிதுகந் தேத்துவான் கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
 பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.     11
 |  
       
 
             11. 
        பொ-ரை: தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவ பெருமானைச்
 சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி, வாசனை வீசும் கடலுடைய
 சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை
 ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
       கு-ரை: 
        மந்தம் - தென்றற்காற்று. சந்தம் - இசைப்பாடல்கள்  
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  செங்கைமான் மறியார்தந் திருமழபாடிப்புறத்துச் சேரச் செல்வார்
 அங்கையார் அழல்என்னும் திருப்பதிகம்
 எடுத்தருளி அணைந்த போழ்தில்
 மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
 தலையினால் வணங்கு வார்கள்
 பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
 போற்றிசைத்தே கோயில் புக்கார்.
 -சேக்கிழார்.
 |  |