| 
       பதிக வரலாறு:      சிரபுரத்துப் 
        புரவலனார், அரவநெடுந் திரைவேலை அணிவான்மியூரில் சிலநாள் இனிது இருந்தபோது, அங்கு வீற்றிருக்கும் உலகாளுடையாரைப்
 போற்றிய பல அருந்தமிழிசைப் பதிகங்களுள் ஒன்று இது.
 பண்: 
        காந்தார பஞ்சமம்  
         
          | ப.தொ.எண்:313 |  | பதிக 
            எண்: 55 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3384. | விரையார் கொன்றையினாய் விடமுண்ட |   
          |  | மிடற்றினனே உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
 பங்குடையாய்
 திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
 யூருறையும்
 அரையா வுன்னையல்லா லடையாதென
 தாதரவே.                         1
 |  
       
       1. 
        பொ-ரை: நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப்
 புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு
 பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த
 திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம்
 ஆதரவாக வேறெதையும் அடையாது.
       கு-ரை: 
        விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில் பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக் கொள்வது;
 ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது எழுத்துப் போலி.
 |