பதிக வரலாறு:
சிரபுரத்துப்
புரவலனார், அரவநெடுந் திரைவேலை அணிவான்மியூரில்
சிலநாள் இனிது இருந்தபோது, அங்கு வீற்றிருக்கும் உலகாளுடையாரைப்
போற்றிய பல அருந்தமிழிசைப் பதிகங்களுள் ஒன்று இது.
பண்:
காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்:313 |
|
பதிக
எண்: 55 |
திருச்சிற்றம்பலம்
3384. |
விரையார் கொன்றையினாய் விடமுண்ட |
|
மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 1 |
1.
பொ-ரை: நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே.
விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப்
புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு
பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம்
ஆதரவாக வேறெதையும் அடையாது.
கு-ரை:
விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில்
பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக் கொள்வது;
ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது எழுத்துப் போலி.
|