பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)61. திருவெண்டுறை809

  உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி
     னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                    3

3452. பண்ணமர் வீணையினான் பர விப்பணி
       தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு
     மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை
     யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                      4


செய்த நெற்றிக் கண்ணையுடையவர். புலித்தோலாடை அணிந்தவர்.
விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக
உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை
என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: படைநவில் - படையாகக் கொள்கின்ற. கடைநவில் -
பாவங்களைச் செய்துவந்த, மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் கடை -
பாவம் “அறன்கடை” (திருக்குறள்). உடைநவிலும் - உடையாகக் கொள்ளப்
படும். புலித்தோல், உடை ஆடையினான் - ஆடையாக உடையவன். உடை
- உடு என்னும் வினையடியாகச் செயப்படுபொருள் உணர்த்தும் ஐகாரவிகுதி
புணர்ந்தும், உடைமை என்னும் விகுதி குன்றி வினைத்தொகையின்
நிலைமொழியாயும் நின்றது. கடிய - விரைந்து செல்லக் கூடிய (விடை)
நவிலும் - பொருந்திய, கொடியான்.

     4. பொ-ரை: சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை
மீட்டுபவர். தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில்
எழுந்தருளியிருப்பவர். தேவர்களால் அறிவதற்கு அரியவர். உமாதேவியைத்
தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். பிரம கபாலம் ஏந்திப்
பிச்சையேற்றவர். தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.