3457. |
கோல மலரயனுங் குளிர் கொண்ட |
|
னிறத்தவனும்
சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய
செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை
வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம்
வெண்டுறையே. 9 |
3458. |
நக்குரு வாயவருந் துவ ராடை |
|
நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென
வெம்மிறைவன் |
உரிச்சொல் மிகுதிப்பொருளில்
வந்தது. எடுத்த என்ற பெயரெச்சத்துக்கு
மலையை என்ற செயப்படு பொருள் வருவித்துரைக்க.
6.
பொ-ரை: அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும்,
குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும்,
தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல்
ஓங்கி நின்றவன் சிவபெருமான். அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக
விளங்கி நின்றான். முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை
அணிந்தவன். கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய
நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை
என்னும் திருத்தலமாகும்
. கு-ரை:
கோலம் - அழகையுடைய மலர். குளிர் கொண்டல் -
என்றமையாற் கரியமேகம் என்க. சீலம் தனது நிலையை. திகழ்ந்து தங்கிய -
பிரகாசித்து உயர்ந்த, செந்தழலான் மூலம் அது - எல்லாத் தத்துவங்கட்கும்
முதலாம் பொருள். ஆகி நின்றார்.
10.
பொ-ரை: ஆடையணியா உடம்புடைய சமணர்களும், மஞ்சட்
காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி
ஏதும் கூறாது, தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள்
பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க. எம் தலைவனான
சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன்.
தேவர்கட்கெல்லாம் தலைவன். பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய்
விளங்குபவனான
|