பக்கம் எண் :

870திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3527. புற்றரவு பற்றியகை நெற்றியது
       மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
     ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
     குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
     பெற்றகயி லாயமலையே.               2


விரும்பும். அநகர் - தூயோர். ஆளுமவர் - ஆள்பவர். போள் - (எதிரிட்ட
விலங்குகளை) கிழிக்கும்படியான. அயில - கூடிய பற்களையுடைய. கோள
-திரண்டவடிவையுடையதான. களிறு - யானையை. ஆளி -
அடக்கியாண்டவர். வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய. தோள் -
தோளையுடைய. அமரர் -தேவராவர். மதர் - செருக்கிய. கூளி - கூளிகள்.
தாளம் எழ - தாளத்தை எழுப்ப. மீளி-(நடனமாடும்) வலியர். மிளிர் -
பிரகாசிக்கின்ற. தூளி-திருநீற்றைப் பூசியவர். காளமுகில்-கரிய மேகங்களாய்.
மூளும்-மூண்ட. இருள்-இருட்டை. கீள - ஓட்ட. பொன் - வெண்
பொன்னாகிய. விரி - ஒளியை விரிக்கும். தாள - அடிவரையையுடைய
கயிலாயமலை.போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது.

     2. பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பைப் பற்றிய கையை
உடையவர். நெற்றியில் ஒரு கண்ணுடையவர். ஒற்றை இடபத்தை உடையவர்.
முப்புரத்தை எரித்தவர். உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். உலகப்
பற்றை நீக்கிய அடியவர்கட்கு நல்ல துணையாக விளங்குபவர். அத்தகைய
பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. மலையிற் பிறக்கும் மணிகள்
ஒளியிழக்குமாறு தன்னொளி மிக்க கயிலாய மலையாகும். கற்றவர்கள்
போற்றித் துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்புடையது இக்கயிலாய
மலையாகும்.

     கு-ரை: புற்று அரவு - புற்றில் உள்ள பாம்பை. பற்றிய - பிடித்தகை.
நெற்றியழ - நெற்றியில் உள்ளது. மற்று ஒரு கண் - மூன்றாவது ஆகிய ஓர்
கண். ஒற்றைவிடையன் - ஒரு இடபத்தையுடையது. செற்றது எயில் - (அவர்)
அழித்தது மதிலை. உற்றது உமை - பிரியாது உடம்பில் பொருந்தியது,
உமையை. அற்றவர்கள் - பற்றற்றவர்களின். நல்துணை - நல்ல
துணைவராவார். (அத்தகைய சிவபெருமான்) உற்ற - தங்கிய. நகர் தான்
-தலமாவது. சுற்றுமணி -