பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)68. திருக்கயிலாயம்875

  துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை
     தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்னிவைமுன்
     னின்றகயி லாயமலையே.          7

3533. மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
       செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை
     யொருக்குட னரக்னுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலு
     நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில வொருத்தனை யெருத்திற
     நெரித்தகயி லாயமலையே.         8


கொன்றை மலர்களின் நறுமணம் தென்றற்காற்றோடு பரவ, இள
யானைக்கன்றுகளும், பெண் யானைகளும், ஆண் யானைகளும்
மலையின் முற்பக்கங்களில் உலவுகின்ற திருக்கயிலாயமலையாகும்.

     கு-ரை: சென்று - பகைவர் இருக்குமிடம் போய். பல - பல
போர்களிலும், வென்று - செயித்து. உலவு - திரிகின்ற, புன் தலையர்
- குறு மயிர்கள் பொருந்திய மலையுடையவர்களாகிய பூதகணங்களின்;
துன்றலொடும் - கூட்டத்தொடும், ஒன்றி - சேர்ந்து. உடனே நின்று -
ஒரு சேர நின்று, அமரர் தேவர்கள் சென்று - போய் என்றும் எக்
காலத்தும்; இறைவன் தன் அடி - கடிவுளின் பாதங்களை - பணிகின்ற,
வணங்குகின்ற, நகர்தான் - தலமாவது. துன்றும்-கொத்தாகப் பொருந்திய,
மலர் - பூக்கள், பொன் - பொன்னைப் போல, திகழ் செய் - விளங்குகின்ற,
(கொன்றை மாலையின்) விரை - வாசனை, (தென்றற்காற்றொடு) சென்று -
பரவி, கமழ - மணக்க, கன்று -கன்றுகளும், பிடி பெண்யானைகளும்,
குன்று - நெருங்கிய. களிறு - ஆண் யானைகளும், என்று இவை
இத்தகைய மிருகங்கள்; முன்நின்ற-மலையின் முற்பக்கங்களிலே நிற்கின்ற;
கயிலாயமலை. புன்தலையர் “புன்றலைய பூதப்பொருசடையாய்” என்னும்
திருமுருகாற்றுப்படை (தி.11) வெண்பாவாலறிக.

     8. பொ-ரை: தந்தத்தில் நெருப்புப்பொறி பறக்க, மலையோடு
கர்வத்துடன் போர்செய்த பருத்த யானையைப் போல, கயிலை