பக்கம் எண் :

910திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3571. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
       யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள்
     வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல
     னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
     யேத்தவினை யகலுமிகவே.              2


மலிமாடம் - நெருங்கிய மாடங்களையும், நீடுபொழில் - நெடிய
சோலைகளையும் உடைய, மாகறல் உளான் - திருமாகறலில் இருப்பவன்.
கொங்குவிரி - வாசனை விரி்கின்ற. வளர்திங்கள் - வளரக்கூடிய பிறைச்
சந்திரனையும். செங்கண்விடை அண்ணல் - சிவந்த கண்களையுடைய
திருமாலாகிய இடபத்தையுமுடைய. சிவபெருமானது அடிசேர்பவர்களும் -
திருவடியை இடைவிடாது நினைப்பவர்களுக்கு. தீவினைகள் -
கொடியவினைகள். தீரும் - நீங்கிவிடும். “பைங்கண்வெள் ளேற்றண்ணல்”
(திருநள்ளாறு) என்னாமல் செங்கண் விடையென்றதனால் திருமாலாகிய
விடையென்க.

     2. பொ-ரை: வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும்,
பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய
மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசை
செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும்,
கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப்
போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய
அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.

     கு-ரை: கலையின் ஒலி - கலை கற்பவர்களின் ஒலியும்,
(மங்கையர்கள் பாடல் ஒலி. ஆடல் ஒலி ஆகிய இவ்வொலிகள் சேர்ந்து)
கவின் எய்தி - இனிமைதர. அழகு ஆர் மலையின் நிகர் மாடம் - அழகு
பொருந்திய மலையையொத்த மாடங்களில். உயர்நீள் கொடிகள் - மிக
நீண்ட கொடிகள். வீசும் - வீசுகின்ற. மலி - (செல்வ வளத்தால்) மிகுந்த.
மாகறல் - உள்ளான். இலையின் மலி - இலையைப் போன்ற வடிவையுடைய.
வேல் - வேலையும். நுனைய -