பக்கம் எண் :

958திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3618. கத்திரிகை துத்திரி கறங்குதுடி
       தக்கையொ  டிடக்கைபடகம்
எத்தணை யுலப்பில்கரு வித்திர
     ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு
     வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண்
     மிடைந்துகளும் வேதவனமே.           5

3619. மாலைமதி வாளரவு கொன்றைமலர்
       துன்றுசடை நின்றசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகை
     மடங்கவன லாடுமரனூர்


     5. பொ-ரை: கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை,
படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க,
தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து
வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக்குதிக்கும் திருவேதவனம்
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கத்திரிகை துத்திரி இவ்வாத்தியங்களுடனே. கறங்கு துடி -
ஒலிக்கும் உடுக்கையும். தக்கை - தக்கை என்னும் வாத்தியத்தோடு.
இடக்கை படகம் என்னும் இவற்றோடு. உலப்பு இல் - அளவற்ற. எத்தனை
கருவித்திரள் - எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள். அலம்ப
- ஆரவாரிக்க. இமையோர்கள் - தேவர்கள். பரச - துதிக்க. ஒத்து - தாள
ஒத்துக்கிணங்க. அற - நன்றாக. மிதித்து - தாளையூன்றி. நடம் இட்ட -
நடனமாடிய. ஒருவர்க்கு - சிவபெருமானுக்கு (இடம் அது என்பர்).
மெய்த்தகைய - உண்மைத் தன்மையையுடைய. பக்தர்கள் - பத்தர்களும்.
சித்தர்கள் - சித்து வல்லவர்களும். மிடைந்து - நெருங்கி. உகளும் -
மகிழ்ச்சி மீக்கூரும். (வேதவனமே;) உகளுதல் - துள்ளிக் குதித்தல்; - அது
மகிழ்ச்சிமீக்கூர நிகழ்வதாற் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.

     6. பொ-ரை: மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளிபொருந்திய
பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று