கு-ரை: கொங்கு - மணம் நிறைந்த. ஓங்கு             என்பதன் குறுக்கல் ஓங்கு. மா - பொரிய. ஓதநீர் - அலைநீர்.ஈசன் ஓருவன்             இருக்கின்றான் அவனருள்பெற இத்தீர்த்தமாடுகின்றோம் என்று எண்ணாதவர்க்கு அத்தீர்த்தமாடுவதால்             விளையும் பயன் இல்லை.                  3. பொ-ரை: பட்டர் ஆயினும், சாத்திரங்கள்             பல கேட்பினும், இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும், எட்டும் ஓன்றும்             இரண்டும் அறிந்தாலும் என்ன பயன்? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற்             பயன் இல்லையாம்.                  கு-ரை: பட்டர் -குருக்கள். இட்டும் - கொடைத்தொழில்             செய்தும். அடுதல் - விருந்து சமைத்தல். ஈதொழில் - அடியார்களுக்குக் கொடுக்கும்             தொழில். பூணில் என் - மேற்கொண்டால் என்ன எட்டும் அதனோடு ஓன்றும் இரண்டும்             என்க. இட்டம் ஈசன் எனாதவர்க்கு - விருப்பம் ஈசனிடத்து உண்டு என்று சொல்லாதவர்க்கு.                  4.பொ-ரை: வேதம் ஓதினாலும்,             வேள்விகள் செய்தாலும், நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும், ஆறங்கங்களை             ஓதி உணர்ந்தாலும் என்ன பயன்? ஈசனை உள்குபவர்க்கு அன்றிமற்றவர்க்கு இவற்றாற்             பயன் இல்லையாம்.                  கு-ரை: நித்தல் - நாடோறும். பயிற்றில்             என் - பயின்றால் என்ன பயன் விளைக்கும். இல்லை - அருள் இல்லை என்க.  |