பக்கம் எண் :

1251
 

நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை

விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: கரந்தை முதலியவற்றில், 'இலை', 'பூ' என்பவற்றை ஏற்ற பெற்றியாற் கொள்க, "கூவிளம்" என்றதன்பின், 'அணிந்த' என்பது, எஞ்சிநின்றது, இனி, 'பரந்த-பரவ அணிந்த' என்று உரைத்தலும் ஆம். நிரம்பற்பாலது அன்பேயாகலின், அஃது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. "மேலையார் மேலையார் மேலார்" என்றதற்கு, மேல் (தி. 7 ப. 96 பா. 7) உரைத்தவாறுபற்றி உரைக்க, உரைக்கவே, 'சிவலோகத்தில் இருப்பவராவர்' என்பது பொருளாமாறு அறிக.

ஏயரகோன் கலிக்காமர் புராணம்

 
பொங்குதிருத் தொண்டருடன்

உள்ளணைந்து புக்கிறைஞ்சித்

துங்கஇசைத் திருப்பதிகம்

தூவாயா என் றெடுத்தே

இங்கெமது துயர்களைந்து

கண்காணக் காட்டாய்என்று

அங்கணர்தம் முன்னின்று

பாடியருந் தமிழ்புனைந்தார். 

303

தி. 12 சேக்கிழார்