தெரிகிறது. வாகீசமடம் என்ற பெயருடன் ஒன்று இத்தலத்தில் இருந்திருக்க வேண்டும். இதற்குக் குலோத்துங்கன் I தன் ஆட்சிக் காலத்தில் நிலம் அளித்துள்ளான் 1 3. திருஅரிசிற்கரைப்புத்தூர் சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் - நாச்சியார் கோயில் பேருந்தில் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகாபுத்தூர் என இன்று வழங்குகிறது. இந்தவூர் அழகார் புத்தூர் திருப்பத்தூர் என்றும் வழங்குகின்றது. அரிசில் நதி ஓடுகிறது. இறைவர் : படிக்காசு வைத்தபரமர். இறைவி : சிவாம்பிகை, சௌந்தர நாயகி அழகம்மை. கோச் செங்கட்சோழன் திருப்பணி. சொர்ணபுரீசுவர சுவாமி மேற்குப் பார்த்த சந்நிதி, சந்நிதித் தெரு, அழகானது. தென்னை மரங்களின் வரிசைகொண்டது. கல்வெட்டு: ஏழு கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அவை எல்லாம் சோழர் காலத்தவை. 1. இராஜராஜன் 7 - ஆம் ஆண்டில் திருப்புத்தூர் உடையார் பரமசுவாமிக்கு 1300 குழி நிலம் வழிபாட்டிற்காக விட்டான். அப்போது மூலகிருகம் கல்லால் படைக்கப்பெற்றது. ஊர்ப்பெயர் திருநாரையூர் நாட்டுப் பரமதேயமான பரதாயகுடி என்று கண்டிருக்கிறது. 2. அதே அரசனால் தனது 22 ஆம் ஆண்டில் ஒரு விளக்குக்காக 3 மா. நிலம் கொடுக்கப்பட்டது. 3. அதே அரசனால் தனது 28 ஆம் ஆண்டில் விளக்குத் தானம் செய்யப்பட்டது. 4. இராஜராஜன் காலத்தில் மேல்வேம்பாநாட்டு நல்லார்
1. 49 of 1903
|